வன்னியில் ரிஷாத் வேட்புமனுத் தாக்கல்.

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் தாெலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அவர் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதன்பாேது ரசிகா பிரியதர்சினி, நிராேஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.

கட்சியின் முக்கியஸ்தர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர்.
………

Leave A Reply

Your email address will not be published.