ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு தவராசா தலைமையில் வேட்புமனு!

ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு சுயேச்சைக் குழுவாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.

ஐனாதிபதி சட்டத்தரணி ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்புதலைமையில் இந்த வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தால் அதிருப்தியடைந்து அக்கட்சியிருந்து வெளியேறியவர்கள், ஏனைய சில கட்சிகளையும் உள்ளடக்கி ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு எனும் புதிய கட்சியை உருவாக்கி இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன் உள்ளிட்ட 9 பேர் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.