திருமலையில் ரயில் மோதி தாயும் மகனும் உயிரிழப்பு!

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் ரயில் மோதி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றள்ளது.

சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47), அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (வயது 10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தந்தை கொண்டு வந்த உணவுப் பொதியை வாங்கிக்கொண்டு தாயும் மகனும் ரயில் பாதையைக் கடக்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலேயே இருவரும் மோதியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.