ரதன தேரர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக எந்தவொரு கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை.

அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

ரதன தேரர் சுமார் இரண்டு தசாப்தங்களாக பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக பணியாற்றினார்.

தாம் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும், எதிர்காலத்தில் சமூகப் பணிகளில் ஈடுபடுவது சரியான தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.