41 முன்னாள் அமைச்சர்கள் தண்ணீர் கட்டணமான 9 மில்லியன் ரூபாவை செலுத்தவே இல்லை

41 முன்னாள் அமைச்சர்கள் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து 09 மில்லியன் ரூபா அறவிட வேண்டியுள்ளது.

பொது விதிகளின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.