நாளை இந்த பள்ளிகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடுவெல கொலன்னாவ மற்றும் வத்தளை கல்விப் பிரிவுகளில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்தி
நிலவும் மோசமான காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயம், கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை மூடுவதற்கு மேல் மாகாண கல்வி செயலாளர் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (14) மூடப்படவுள்ளன.

கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளையும் (14) மற்றும் நாளை மறுதினமும் (15) விடுமுறை.

மேலும், கொலன்னாவ மற்றும் கடுவெல கல்விப் பிரிவுகளில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் (14 மற்றும் 15ஆம் திகதி) மூடப்படும்.

Leave A Reply

Your email address will not be published.