எனக்கு வாக்களிக்காதீர்கள்..- SJB வேட்புமனுவிலிருந்து விலகிய பரணவிதான

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் SJBயின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த கருணாரத்ன பரணவிதான அந்த வேட்புமனுவில் இருந்து விலகியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் விருப்புரிமையை பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்டத் தலைவரோ, கட்சியின் உறுப்பினர்களோ பொறுப்பல்ல என்றும் அவர் அறிவித்தார்.

தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.