யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நேற்று (13) குண்டு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக கொடிகம்மம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தனது வயலில் வேலியை தயார் செய்வதற்காக நிலத்தை தோண்டும் போது அங்கு வெடிப்பு ஏற்பட்டு இந்த இளைஞன் பலத்த காயமடைந்து கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​யுத்த காலத்தில் குழி ஒன்றில் புதைக்கப்பட்ட வெடிகுண்டே இவ்வாறு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த வில்வராசா தனுஷன் என்ற 19 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்துள்ளதுடன், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.