மதுபானசாலைக்கு எதிர்ப்பு! தையிட்டியில் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு முன்பாக வலிகாமம் வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.