ஶ்ரீலங்கன் விமான விமானிகள் இருவர் வானில் தகராறு.. இருவரும் பணி இடைநீக்கம்..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் பிரதான விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்தின் துணை விமானி கழிவறைக்குச் சென்று திரும்பிய போது விமானி அறைக்குள் நுழைவதற்கான கதவை பிரதான விமானி திறக்காததால் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடுகிறது.

விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த நிலை ஏற்பட்டது.

பயணிகளை பாதுகாப்பதற்காக, சர்வதேச சிவில் விமான சேவைகளின் மரபுகளின்படி, இந்த விமானிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.