வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு!

வீடொன்றில் இருந்து ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் இருந்தே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டன என்று பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி ஆண் பெண்ணைக் கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும், 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.