புதிய முகங்களை நாடாளுமன்றத்துக்கு இந்த முறை மக்கள் அனுப்ப வேண்டும்! – மாவீரர் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பழைய அரசியல்வாதிகளை நிராகரித்து புதிய முகங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவீரர் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலக் காப்பகத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெயரளவுக்குப் புதிய முகங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. எனவே, குறித்த சூழ்ச்சிகரமான நடவடிக்கையை கண்டறிந்து வாக்காளர் பெருமக்கள் சரியான முறையில் சிந்தித்து பழைய அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்.

கடந்த 15 வருடங்களாகவும் அதற்கு முன்னரும் இந்தப் பழைய அரசியல்வாதிகள் தமிழ் மக்களை விற்றுப் பிழைத்தார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகங்களைப் பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும்.” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.