நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்தவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், மாவட்ட மற்றும் பிரதேச கட்டமைப்புக்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டதுடன், வன்னி மாவட்ட வேட்பாளர்கள், உறுப்பினர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.