தமிழர்களுக்கே வாக்களியுங்கள்! – ‘மான்’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மிதிலைச்செல்வி வேண்டுகோள்.

தமிழ் மக்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும். பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மிக ஆபத்தானது.

அதேவேளை, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இழப்புக்களைப் பெருமளவில் சந்தித்தவர்கள் பெண்களே. அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.