வானில் ஸ்ரீலங்கன் கழிப்பறை சண்டை.. தலைமை விமானி ராஜினாமா..

சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் விமானி அறையை பூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய விமானி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தின் போது கழிவறையில் இருந்து பெண் துணை விமானி திரும்பிய போது தலைமை விமானி அறையின் பூட்டைத் திறக்காமையால், தலைமை விமானி மற்றும் துணை விமானி இடையே தகராறு ஏற்பட்டது.

இச்சம்பவம் விமான பயணத்தை பாதிக்கவில்லை, ஆனால் பயணிகள் மற்றும் பணியாளர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தையடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், விமானி மற்றும் துணை விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.