அவசர முக்கிய அறிவித்தல்.

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு/ சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) நண்பகல் 12 மணியிலிருந்து 3 நாட்களுக்கு இந்தப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளார்கள்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் பயணித்து சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்றும், மேலும் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டி நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறியத்தந்துள்ளார்.

மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாகப் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்துக்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் அரச அதிபர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.