இளம் அரசியல்வாதியின் பில்லியன் டாலர் துபாய் கணக்கைப் பார்த்தேன் : சந்திரிகா குமாரதுங்க.

இளம் அரசியல்வாதி ஒருவரின் மில்லியன் டொலர் கணக்கை தான் பார்த்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கணக்காளர்களின் 45வது மாநாட்டில் கலந்துகொண்டபோதே துபாயில் அந்த கணக்கு இருந்தமை தெரிந்தது என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கணக்கின் அசல் பிரதிகளை சமர்ப்பிக்க முடியாததால், அந்த இளம் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியாது போனது என அவர் மேலும் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று அரசியல்வாதியின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக டுபாய் சென்றதாகவும், ஆனால் எந்தவொரு கணக்கு தொடர்பிலும் எவ்வித தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகாவுக்கு பதிலாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.