பொலிஸாரால் தேடப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடிகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில்பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பான விசாரணைதொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ பொலிஸாரினால் தேடப்படுவதாகத் தெரியவருகின்றது.

ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட சொகுசுகார் , பாகங்களாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு பொருத்தி, வேறோர் வாகனத்தின்இலக்க தகட்டுடன் பாவிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தற்போது ஆஜராக முடியாது என தனது சட்டத்தரணிகள்மூலம் அவர் அறிவித்திருந்த நிலையில்,

சில நாட்கள் ஆகியும் அவர் வாக்குமூலம் அளிக்காததால் விசாரணையும்முடங்கியுள்ளது.

தொடர்ந்தும் அவர் இரகசியப் பொலிசிற்கு வராத பட்சத்தில் நீதிமன்றத்தில்முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.