மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று (19) திடீர் மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி.மாவை சேனாதிராஜா , கட்சியில் ஏற்பட்ட பல உள்ளக நெருக்கடிகளால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்ததாக தெரிவித்திருந்தார்.

அதன் பின்னரும், முன்னாள் எம்.பி.மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக கட்சியின் ஒரு குழுவினர் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும், ஒவ்வொரு சம்பவத்தாலும் அவர் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த அதே நிலைமையில், தற்போதும் இருப்பதாக யாழ்.தனியார் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.