இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பலி!

நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு இளைஞர்களும் மது அருந்திவிட்டு இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடியுள்ளனர். இதன்போது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், இருவரும் பொல்கஹவெல மற்றும் புஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.