லெபனான் நிதி நிலையங்களைத் தாக்கும் இஸ்ரேல்.

லெபனானில் உள்ள நிதி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த நிலையங்கள் ஹிஸ்புல்லாவுக்கு உதவி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது.

இம்மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்கான பதிலடி குறித்து முடிவெடுக்கப் பாதுகாப்பு அமைச்சரவை கூடுவதாகத் தெரியவந்துள்ள வேளையில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனானின் 24 வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டது.

தென் பெய்ரூட்டில் Al-Qard Al-Hassan நிதி நிலையங்களின் மூன்று கிளைகள் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த நிறுவனம் ஹிஸ்புல்லாவுக்கு நிதி உதவி செய்து வருவதாக இஸ்ரேல் கூறுகிறது.

அதற்கு முன்னதாக, பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம், நிலத்தடி ஆயுதப் பட்டறை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.