யாழ்ப்பாணம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு காரொன்றை தெல்லிப்பளை பொலிஸார் நேற்று (21) கண்டுபிடித்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் , கார் போலி நம்பர் பிளேட்டில் இருந்தது தெரியவந்தது.

குறித்த இடத்திற்கு காரை கொண்டு வந்தவர் மற்றும் கார் யாருடையது என்பது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் காரை ஏதாவது குற்றச் செயல்களுக்குத் திட்டமிட்டு பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அப்படி இல்லையேல் கொழும்பு அரசியலுடன் தொடர்புடைய யாரேனும் இந்த காரை பயன்படுத்திய பின் , யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று இவ்வாறு காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொலிஸாருக்கு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தெல்லிப்பளை பொலிஸார் இந்த கார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.