சீனாவில் இருந்து இலங்கைக்கு அவசர வெள்ள நிவாரண நிதி ரூ. 30 மில்லியன்.

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong 30 மில்லியன் ரூபாவை வழங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதுடன் வெள்ளத்தடுப்பு மற்றும் மேலாண்மை தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், எதிர்கால வெள்ளச் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் கடைப்பிடிக்கக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சமீபத்தில் பெய்த கனமழையால், பல மாவட்டங்களில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்பட்டது. இது ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு , உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.