அம்பாறை மாவட்டத்தின் அருகம்பே தாக்குதல் திட்டம் பற்றி இந்திய ‘ரோ’ தகவல் : தாக்குதல் ஒப்பந்தம் ஐம்பது லட்சம்.

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டதாக நேற்று (23) தெரியவந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்பிங் செய்பவர்கள் அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட.

இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்று நடக்க இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அண்மையில் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.

இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரையான காலப்பகுதியில் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் , அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இருவரது பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவல் கிடைத்ததையடுத்து, கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தனர்.

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினர் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் மற்றும் அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதும் காணமுடிந்தது.

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உள்ளிட்ட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அறுகம்பே மற்றும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இலங்கையில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்களை , இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் நேற்று அறிவித்தது.

இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்தும் , அங்குள்ள இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு போன்ற பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.

இதனிடையே, ஹீப்ரு சின்னங்கள் மற்றும் யூத மதத்தை பரப்பும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் , இன்று காலை அமெரிக்க பிரஜைகள் மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதால் மறு அறிவித்தல் வரை அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தல பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவித்துள்ளது. .

அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயங்கள் ஆகியவற்றின் அறிவிப்பின் அடிப்படையில் இலங்கையில் தங்கியுள்ள தமது பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட பயண வழிகாட்டிகளை ஒரே நேரத்தில் புதுப்பித்துள்ளன.

இதேவேளை, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.