கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிகுண்டு பீதி

இன்று (24) பிற்பகல் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விஸ்தாரா விமானம் உள்ளே வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

131 என்ற UK விமானம் பிற்பகல் 02.56 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விமானத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

குறித்த விஸ்தாரா விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி இலங்கை வந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வெடிகுண்டு பீதி காரணமாக குறித்த நேரத்திற்கு முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.