வாக்களிக்கும் முறைமை பற்றி தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்போது செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டமை தொடர்பில் முதற்கட்டமாக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி – ஒவ்வொரு திணைக்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துதல் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பி. ப. 3.15 மணிக்கு அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுபவர்கள் அவர்களுடைய திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.