யாழ்.மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை மயக்கும் 2240 போதை மாத்திரைகள் பொலீசாரால் பறிமுதல்

யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளை இலக்கு வைத்து பாடசாலை மாணவர்களுக்கு அதிக விலைக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவரை போதைப்பொருள் கையிருப்புடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை (24ஆம் திகதி) கைது செய்ததுடன், மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரிடம் இருந்து 840 போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 23ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நபர் ஒருவரைக் கைது செய்து 1400 போதை மாத்திரைகளை கண்டெடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்திலும் நகரிலும் பல பாடசாலைகளுக்கு அருகில் பொதுமக்கள் போல நடமாடி வேடமணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.