பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம்.

இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் நேற்று (14) இரவு 11.00 மணியளவில் கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த போது பஸ்ஸில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ்ஸின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.