கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் பணிபுரியும் சிலரிடம் விசாரணை நடத்தப்படும்!

கணேமுல்ல சஞ்சீவ் கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்துடன் தொடர்புடைய சிலரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று ஆளும் கட்சி தலைமை அமைப்பாளர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பெரேரா ஆகியோர் அரசின் உளவுத்துறை தகவல் பகுப்பாய்வு பலவீனத்தை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

இந்த அமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் , தொடர்புடையவர்களாக சந்தேகிக்கும் பொலிஸில் பணிபுரியும் , பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களைக் கூட கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், நீதிமன்றத்துடன் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. எனவே, தேவையான தகவல்கள் அவ்வப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், 28ஆம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செலவினத் தலைப்பு நடைபெறும் போது, விசாரணையை பாதிக்காத தகவல்களை நாங்கள் சபைக்கு வழங்குவோம். எனவே விசாரணையை நம்புங்கள்.

தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என ஆளும் கட்சி அமைப்பாளர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.