இலங்கையின் பாதுகாப்பு நிலை: ஜனாதிபதி தலைமையில் இராணுவத் தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இராணுவ உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கையின் பாதுகாப்பு நிலை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர, ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க, பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.