15 சதவீத புதிய வரி காரணமாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்!

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகம் மற்றும் இணையம் மூலம் ஃப்ரீலான்ஸர்களாக நாட்டிற்கு டொலர்களை சம்பாதிக்கும் சேவைகளுக்கு 15 சதவீத வரி விதிப்பதால், சேவை ஏற்றுமதித் துறையில் உள்ள வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய முடிவுகளால் படிப்படியாக முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத் துறை சரிவடையும் அபாயம் இருப்பதாகவும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் பொறியாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

இந்த முடிவால் இதுவரை நாட்டிற்கு வந்த டொலர் வருமானமும் இழக்கப்படும் என்றார்.

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகம் மற்றும் இணையம் மூலம் ஃப்ரீலான்ஸர்களாக நாட்டிற்கு டொலர்களை சம்பாதிக்கும் சேவைகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் 15 சதவீத வரி அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை விட அதிக வரி சதவீதம் முன்மொழியப்பட்டதாகவும், இந்த வரி கட்டாயம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறுகிறது.

சாதாரண குடிமகன் 36 சதவீதம் வரை வருமான வரி செலுத்தும் நிலையில், டிஜிட்டல் சேவை வழங்குபவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

பொதுவாக, வருமானம் ரூ.150,000க்கு மேல் இருந்தால், முதல் ரூ.85,000க்கு 6 சதவீதமும், அடுத்த ரூ.43,000க்கு 18 சதவீதமும், மீதமுள்ள வருமானத்திற்கு 36 சதவீதம் வரையும் வரி செலுத்த வேண்டும்.

ஆனால், சேவை ஏற்றுமதியில் இருந்து வரும் வருமானத்தை தவிர மற்ற வருமானத்திற்கு மட்டுமே இந்த வரி விதிக்கப்படுகிறது என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

“தற்போது டிஜிட்டல் சேவையை ஏற்றுமதி செய்து மாதம் ரூ.150,000 சம்பாதித்தால், அதற்கு வரி விதிக்கப்படாது.”

ஆனால், அதைத் தாண்டிய எந்த வருமானத்திற்கும் அதிகபட்சமாக 15 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.