இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்-கலாநிதி பீட்டர் புரூவர்.

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி. பீட்டர் புருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலே இன்று (04.03)செவ்வாய் காலை பங்கேற்ற வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகும் எனவும் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள். எதிர்காலத்தில் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.