தேசபந்துவை தேடி போலீஸ் படை பலமான ஒருவரின் வீட்டை சுற்றி வளைத்தது..

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள காவல்துறை தலைவர் தேசபந்து தென்னக்கோனை தேடி கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாத்தறை பகுதியில் அமைந்துள்ள பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவின் பெரிய வீடு நேற்று இரவு 11 மணியளவில் இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு அதிகாரிகள் குழுக்கள் கொழும்பிலிருந்து மாத்தறைக்குச் சென்று இந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது பஸ்நாயக்க நிலமேயின் வயதான தாய் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

தனது வீட்டில் தேசபந்து தென்னக்கோன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறிந்ததாக திஷான் குணசேகர கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.