மறந்த வாக்குறுதிகளை நினைவூட்ட வடக்கில் கையெழுத்து வேட்டை: ஜனாதிபதிக்கு ஒரு லட்சம் கையெழுத்து மனு!

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க, தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை நினைவூட்ட, வடக்கில் ஒரு லட்சம் கையெழுத்துகள் கொண்ட மனுவை தாக்கல் செய்யும் முயற்சி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் 11ம் திகதி தொடங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகே கையெழுத்து பெறும் பணி துவங்கியது. முதல் நாளிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் கிடைத்துள்ளன.

அத்தியாவசிய மருந்துகள், பள்ளி உபகரணங்கள் மீதான வரிகளை நீக்குதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கில் நில உரிமை கோரிக்கைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு ஜனாதிபதி மற்றும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.