பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை: அந்தரங்க புகைப்படங்கள் எடுத்து மிரட்டிய கொடூரன் !

அனுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனை விடுதியில் அத்துமீறி நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து, மொபைல் போனை பறித்து சென்ற நபரை அனுராதபுரம் மற்றும் கல்நேவ போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை இணைந்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி, 34 வயதுடைய அல்லபார, கல்நேவா பகுதியைச் சேர்ந்தவர்.

குற்றம் செய்ய பயன்படுத்திய கத்தி, குற்றவாளி அணிந்திருந்த ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட மொபைல் போனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் வேறு சில குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால், அவரை அனுராதபுரம் தலைமை போலீஸ் நிலையத்திற்கு மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று, பெண் மருத்துவர் தனது அறைக்கு சென்ற பிறகு யாரோ கதவை தட்டியுள்ளனர். “கதவை திறங்கள், நான் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவன், பயப்பட வேண்டாம், நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்று அந்த நபர் கூறியுள்ளார்.

மருத்துவர் கதவை திறந்ததும், அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, தனது சிவப்பு நிற சட்டையை கழற்றி, மருத்துவரின் வாயை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், மருத்துவரின் மொபைல் போனை பறித்து, மிரட்டி கடவுச்சொல்லை பெற்று, அவரது புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால், புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மருத்துவரை மிரட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.