இலங்கை பெண் அரசியல்வாதி பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களால் நியூசிலாந்திற்கு தப்பிச் சென்றார்.

இலங்கையைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களால் நியூசிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் இருப்பதாக கூறி அவர் நியூசிலாந்திற்கு சென்றுள்ளார்.
அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவரது வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, 32 வயதான அவருக்கு தற்போது நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர வேண்டுமென்றால், ஒரு முக்கிய அரசியல்வாதியுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும், இவ்வாறு மிரட்டிய நபர் 2019-ல் இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர் என்றும் கூறப்படுகிறது.