21 பேரை மருத்துவமனைக்கு அனுப்பிய பேருந்து விபத்து!

நிக்கவரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று ஆரச்சிகட்டுவ, பத்துலுவோயா பகுதியில் சாலையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதி பின்னர் கடை மற்றும் வீட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (17) காலை நடந்துள்ளது.
விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.