அதானியின் காற்றாலை மின் நிலையத்திற்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன…

இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் வெடித்தலத்திவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று திரும்பப் பெறப்பட்டன.

இந்த மனுவை சுற்றுச்சூழல் நீதி மையம் உட்பட ஐந்து தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.

அதானி நிறுவனம் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு மோஷன் மூலம் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு மனுதாரர்கள் தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.