தேசபந்துவின் மனைவியை காரணமாக்கி, மருந்து வழங்குவதில் தடை ஏற்பட அனுமதிக்க மாட்டோம் – நலிந்த

போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியை காரணமாக வைத்து , அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் மருந்து விநியோக நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர், சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனின் மனைவி விடுப்பு எடுத்து பல நாட்களாக வேலைக்கு வராததால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

“அவர் அரசு மருந்து கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாக அவ்வப்போது விடுப்பு எடுத்தார். அவர் மீண்டும் வேலைக்கு வந்து மீண்டும் விடுப்பு எடுத்துள்ளார். இந்த நடைமுறையின்படி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அவரது வருகையின்மை காரணமாக அரசு மருந்து கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சட்ட அதிகாரி ஒருவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார். எனவே, மருந்து விநியோகத்தில் தேசபந்துவின் மனைவியை காரணமாக வைத்து, மருந்து விநியோக நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட அனுமதிக்க மாட்டோம் .”

Leave A Reply

Your email address will not be published.