இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய அதிகாரிகளால் கைது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்களும் படகு ஒன்றும் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற அவர்கள் தற்போது ராமநாதபுரம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாங்கள் விபத்தில் சிக்கியதாகவும், பின்னர் வேறு மீன்பிடி படகு மூலம் இந்தியாவின் ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், மீனவர்கள் சென்ற படகில் கஞ்சா பொட்டலங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

46 மற்றும் 54 வயதுடைய இரண்டு மீனவர்கள் இவ்வாறு இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.