தெற்கில் மற்றொரு துப்பாக்கிச் சூடு. இரண்டு இளைஞர்கள் பலி!!

தெவுந்தர விஷ்ணு கோவில் அருகே நேற்று (மார்ச் 21) நள்ளிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 11.45 மணியளவில் தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோவிலின் தெற்கு வாசலுக்கு முன் சிங்காசன சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அவர்கள் இருவரும் தெவிநுவர கபுகம்புர பகுதியில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வேனில் வந்த சிலர் வேனை மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்த T56 ரக துப்பாக்கி மற்றும் 9 மிமீ ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து T56 ரக தோட்டாக்கள் 39, 2 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 9 மிமீ ரக தோட்டாக்கள் 2 மற்றும் 2 பாவிக்காத தோட்டாக்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பக்க சாலையில் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் T56 ரக துப்பாக்கியின் மேகசின் மற்றும் மேலும் T56 ரக தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தெவிநுவர சிங்காசன சாலையில் வசித்து வந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருகா ஆகிய 28 மற்றும் 29 வயது இளைஞர்கள் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.