தேஷபந்து சாப்பிடுவதில்லை.. பேசுவதில்லை.. சிறை அறையில் பார்த்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்..

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறை தலைவர் தேஷபந்து தென்னகோன் உணவு உட்கொள்வதை மறுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் முதல் நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் உணவு உட்கொள்வதை மறுத்துள்ளார்.
சிறைக்குள் யாரிடமும் பேசாமல், சிறை அறையில் உட்கார்ந்து பார்த்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறை தலைவர் தற்போது சிறையில் பலத்த பாதுகாப்புடன் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிறை அதிகாரிகள் அவரை தும்பர சிறைக்கு அழைத்துச் சென்றனர்.