இரு மீனவ சமூகங்களுக்கு இடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இப்தார் நிகழ்வு(video)

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(MSEDO) ஏற்பாடு செய்திருந்த இப்தார்  நிகழ்வு,
நேற்று (25.03) செவ்வாய்க்கிழமை மாலை முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி முஸ்லிம் கலவன் மகா வித்தியாலயத்தில்  இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் பணியாளர்கள் இணைந்து குறித்த நிகழ்வை நடாத்தினர்.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்  மீனவ இளைஞர்களும்   தமிழ்  மீனவ இளைஞர்களும் குறித்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரு மீனவ சமூகங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை  மேம்படுத்தி சமயங்களை மதிக்கும் வகையில்   குறித்த இப்தார் நிகழ்வானது மெசிடோ(MSEDO) நிறுவனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.