கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் எமக்கு நாட்டமில்லை: சீனா தெரிவிப்பு

சீனா, கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என்று தெரிவித்திருக்கிறது.

கனடா, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அந்நியத் தலையீடுகள் இருக்கக்கூடும் என்று கூறியிருந்தது.

சீனா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் தலையிடும் சாத்தியம் அதிகம் என்று கனடிய பாதுகாப்பு உளவு சேவைப் பிரிவு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் சீனாவின் கருத்து வந்துள்ளது.

இந்தியாவுக்கும் அத்தகைய நோக்கமும் ஆற்றலும் இருக்கக்கூடும் என்று கனடா சொன்னது.

ரஷ்யாவும் பாகிஸ்தானும்கூடத் தனது தேர்தலில் தலையிடக்கூடும் என்றும் கனடா கூறியது.

கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல்.

பிரதமர் மார்க் கார்னி, ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அவரின் மிதவாதக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.