சாணக்கியனின் உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் – ஆளும் தரப்பின் எதிர்ப்பு !

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக ஆளும் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அடிப்படைப் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, சாணக்கியன் பயன்படுத்திய வார்த்தைகளும் மொழி நடையும் சபைக்குப் பொருத்தமற்றவை என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சாணக்கியன் பொருத்தமற்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், இது குறித்து சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இத்தகைய செயல்களுக்கு இடமளித்தால் நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று பிரதி சபாநாயகர் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.