மீதொட்டமுல்ல துப்பாக்கிச் சூடு: சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் படுகொலை (முதல் செய்தி) டான் பிரியசாத் இறக்கவில்லை (பிந்திய செய்தி)

மீதொட்டமுல்ல ‘லக்ஸந்து செவன’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனது வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்த பிரியசாத் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பவத்திற்குப் பின்னர் பிரியசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அவரது மரணத்தை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கொலை சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிந்திய செய்தி : டான் இறக்கவில்லை.. இன்னும் ஐசியுவில் இருக்கிறார் – காவல்துறை

டான் பிரியசாத் இறக்கவில்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக ஆர்வலர் டான் பிரியசாத் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தான் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.