30 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது!

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸா ர் இன்று தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்று பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று இரவு வீடொன்றைச் சோதனை செய்த பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 போத்தல் சட்டவிரோத சாராயத்தைக் கைப்பற்றினர்.

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.