வவுனியாவில் தந்தை செல்வாவின் 48ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா, மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.