ரணிலின் புண்ணியத்தால்தான் ஜனாதிபதியானார் அநுர! – எதிரணி கூறுகின்றது.

“ரணில் இல்லையேல் அநுர ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்கமாட்டார். எனவே, ரணில் மீது தேசிய மக்கள் சக்தி அரசு கை வைக்கும் என நான் நம்பவில்லை.”

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரணில் விக்கிரமசிங்க வரவழைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புண்ணியத்தால்தான் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். ரணில் இல்லையேல் அநுர இந்தப் பதவிக்கு வந்திருக்கமாட்டார். எனவே, பிரச்சார மேடைகளில் கூறப்படுவது போல் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் நம்பவில்லை. என்ன நடக்கின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.