சசிகலா விடையம் தொடர்பில் சம்பந்தருடன் கலந்தாலோசிப்போம் – மாவை

சசிகலா விடையம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று காலை 6 மணியளவில்  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சந்திப்பொன்றை மேற்கொண்டார் அதன் பின்னர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…

தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. சசிகலா ரவிராஜ் கூறுவது போன்ற நிகழ்சிகள் நடைபெற்றிருந்தால் அது கட்சிக்கு அவமாணத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இது தொடர்பில் என்ன முடிவினை எடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந்தாலோசித்து எடுப்போம். தேசியப் பட்டியலில் சசிகலாவை உள்வாங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இனிமேல் தான் ஆராய வேண்டும்.

தான் வெற்றிபெற்றுவிட்டதாக அங்கு கடைமையாற்றிய அலுவலகர்களே உத்தியோகப் பற்றற்ற முறையில் தெரிவித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்த நிலையில் முடிவுகள் நீண்ட இடைவெளியின் பின்னர் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சசிகலாவின் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ் விடையம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவிற்கு வருவோம் என்றார்.

Comments are closed.